திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்; திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், துணைப் […]

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் […]

விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்வதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மேலும் மாநிலம் […]

கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக […]

அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் 3 முட்டைகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அங்கன்வாடி மையங்களில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாரம் 3 முட்டைகள் வழங்கப்படும் என உயர்த்தி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு […]

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் 2023-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இன்று வரை […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணி அதி வேகத்தில் நடைபெற்று வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மக்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளை வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் […]

தாவல் திலகம் குஷ்பு என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முரசொலி நாளிதழ் நடிகை குஷ்புவுக்கு பட்டப்பெயர் வைத்துள்ளது. சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆர்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியது பற்றி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பல்வேறு கட்சித்தாவலில் தொடர்கின்றார். தேவையில்லாமல் முதல்வர் பற்றி பேசி வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்திற்குள் […]

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்ததை அடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறிவிட்டு அரசு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ப்ரியாவின் குடும்பத்தினர் வீடு இன்றி கஷ்டத்தில் இருப்பது […]

ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரிக்க தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி […]