மேற்காசிய போர் தீவிரமடைந்து வருகிறது.. இந்த போர் காரணமாக எரிபொருள் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த போர் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும், தேர்தலை எதிர்நோக்கியுள்ள மாநிலங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்பில்லை. இந்தக் கலந்துரையாடல், ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் ‘டீம் இந்தியா’ என்ற உணர்வில் ஒருமித்த அணுகுமுறையை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் என […]
modi
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மற்றும் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். நிலைமையைச் சமாளிக்கவும் பொது நலனைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அனைத்து முனைகளிலும் செயல்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். மேலும் அவர், “ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரின் தாக்கம் நீண்டகாலத்திற்கு நீடிக்கக்கூடும்; இருப்பினும், அரசாங்கம் விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டின் நலனே முதன்மையானதாகக் கருதப்படுவதாகவும் […]
ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]
நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை செயல்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்கு பதிலாக, ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததற்கு தமிழக அரசின் ஆழ்ந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் […]
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரியில் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின்போது, தமிழக விவசாயிகளுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜகவை பொருத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று […]
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு முக்கியமான நிதியுதவித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதாகும். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த உதவி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PMMVY என்பது மத்திய அரசின் ஒரு […]
உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் […]
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை நேற்று சந்தித்தார்.. லோக் கல்யாண் மார்க் (Lok Kalyan Marg) உள்ள தனது இல்லத்தில், 2025 ICC மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்று சந்தித்து பாராட்டினார். “நாங்கள் இறுதியாக கோப்பையை வென்றோம்” என்று மகளிர் அணித் தலைவி […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் அழகான மனிதர்” என்றும், அவரை “போராளி” என்றும் வர்ணித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக தென் கொரியாவில் டிரம்ப் பேசினார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். முதல்வர் மோடி மிகவும் அழகான நபர். அவர் உங்கள் தந்தையுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் […]

