பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் காலமானார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்களுக்கும் அதிகம் உண்டு. பாலகிருஷ்ணா – போயபதி […]

குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார். ’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனபோதும் கே.பாலச்சந்தரின் திரைப்படம்தான் இவருக்கு […]

சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]

பிரபல பெண் சமூக ஆர்வலர் எலாபென் பட் காலமானார். புகழ்பெற்ற பெண் சமூக ஆர்வலர், காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கத்தின் நிறுவனர் எலாபென் பட், குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் காலமானார். நல்ல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு 89 வயது. எலாபென், நிறுவிய காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கம் மிகப்பெரிய பெண்கள் கூட்டுறவு மற்றும் […]

பெங்காலி நடிகை சோனாலி சக்ரவர்த்தி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 59. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பெங்காலி தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட முகமான சக்ரவர்த்தி, கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சோலங்கி ராய் மற்றும் கவுரப் சட்டர்ஜி ஆகியோர் முன்னணியில் இருந்த பிரபல பெங்காலி நிகழ்ச்சியான […]

மறைந்த கன்னடம், தெலுங்கு, தமிழ் நடிகர் கல்யாண் குமாரின் மகன் பரத் கல்யாண் சினிமாவில் நடிகராக அறிமுகமானாலும், அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக மிகவும் பிரபலமானார். தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபூர்வ ராகங்கள், வம்சம் மற்றும் ‘ஜமிலா’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி வயது 43, சில வாரங்களாக கோமா நிலையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். […]

புகழ்பெற்ற கல்வியாளரும், ஸ்ரீ வாணி கல்விச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் நீலம் நாராயணம்மா காலமானார். 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் நாராயணம்மா ஒரு மருத்துவராக தனது சேவைகளுக்காக மட்டுமல்லாமல், அனந்தபூர் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அவரது சொந்த கிராமமான இல்லூரில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக தனது சமூக சேவையை செய்து வந்தார். கில்ட் […]

லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், […]

“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த “ஒரு கிடயின் கருணை மனு” என்னும் திரைப்படம் திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ரகுராம் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் வரவிருக்கும் திரைப்படமான சத்திய சொதனை […]

பிரபல இசையமைப்பாளர் திடீரென மரணம் அடைந்தது திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் ரகுராம். இவர் 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு இசை அமைத்திருந்தார். 2011ம் ஆண்டு ரீவைண்ட் , ஆசை படங்களின் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இருப்பினும் இவருக்கு ஒரு கிடாயின் கருணை மனு இவருக்கு சிறந்த படமாக அமைந்தது. சுரேஷ் சங்கையாவின் அடுத்து வரவுள்ள சத்ய […]