தமிழகத்தில் பீகார், கர்நாடகா போன்ற வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை தமிழக மக்கள் தாக்குவதாக கடந்த சில தினங்களாக வதந்தி ஒன்று பரவியது. இதனை வெறும் வதந்தி தான் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த மாநிலத்தில் இதற்காக ஒரு சிறப்பு குழுவை அமைத்து அந்த […]
police arrest
உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார். […]
தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனையை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், நீச்சல் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுக்கான மைதானங்கள் உள்ளன. இங்கே ஏராளமான விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர்களின் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழாவின் போது நாடகம் பார்க்கச் சென்ற இளம் பெண்ணை ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அந்தத் திருவிழாவில் ஒரு நிகழ்வாக நாடகம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக சென்று நாடகம் […]
சமீபகாலமாக தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவதால் அவர்கள் அச்சமடைந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இதனை தவறான செய்தி என்று மாநில அரசும், காவல்துறையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரணை நடத்துவதற்கு […]
காலணியை தங்கள் வீட்டு வாசலில் கழற்றி வைத்ததற்காக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள் மும்பையைச் சார்ந்த ஒரு தம்பதி. இது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கணவரை காவல்துறை தேடி வருகிறது. மும்பையின் தானே மாவட்டத்தில் நயா நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் அப்சர் காதரி(54). இவருக்கும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினருக்கும் இடையே காலணியை வாசலில் கழற்றி வைப்பது […]
தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை வருணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணம் வருண் குடும்பத்தாருக்கு தெரியாது. இந்நிலையில் […]
சென்னை தாம்பரத்தை அடுத்த மாதம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்து அதிலிருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தந்தையின் காதலியை மகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சார்ந்தவர் பரமேஸ்வரி வயது 40. இவருக்கும் கம்பர் தெருவை சார்ந்த நரசிம்மன் என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக நரசிம்மன் அடிக்கடி பரமேஸ்வரி வீட்டுக்கு வந்து இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக நரசிம்மனின் மகன் ஆனந்த் குமார் […]