திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் முத்துக்கிருஷ்ணனுக்கும், எஸ்தருக்கும் இடையே […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சத்யராஜ் (27) இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. […]

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், மனநல பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய தாயுடன் அந்த சிறுமி வசித்து வந்தார். அதோடு அரசு பள்ளியில் அவர் படித்து வருகிறார் இத்தகைய நிலையில், சிறுமி படித்து வரும் அரசு பள்ளியில் சைல்டு லைன் சார்பாக போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால் […]

கொல்கத்தாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாரதா வாக்கர் கொலையைப் போன்று ஒரு சம்பவம் மறுபடியும் நிகழ்ந்திருப்பது நாடெங்கிலும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறந்த பெண்ணின் உடல் பாகங்களை சாரதா கார்டன் பகுதியில் இருந்து விஷ்ணுபூர் காவல் நிலைய அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக ஆலிம் சேக் என்பவர் கைது செய்யப்பட்டு […]

திருச்சியை சார்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணிபுரிந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே அந்த பழக்கம் காதலாக மாறியது. அதன் பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 இளைஞர்கள் பைக் திருடிய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் திருடு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். மேலும் இது போன்ற பல பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவானதால் […]

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சார்ந்தவர்கள் சீனிவாசன்(20) மற்றும் விக்னேஷ் (23). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லையால் […]

காஞ்சிபுரத்தைச் சார்ந்த 23 வயது இளைஞரை தந்தையும் மகனும் சேர்ந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமுதன் தெருவை சார்ந்தவர் செல்வம் இவரது மகன் தமிழ்வாணன் வயது 23. டிப்ளமோ முடித்துள்ள இவ்வாறு அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் சதாவரம் பகுதியைச் சார்ந்த தினகரன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்றிரவு தனது நண்பனை […]

திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரைச் சார்ந்தவர் சுரேஷ். பைனான்ஸியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது மகளுடன் படிக்கும் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து […]

500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் 40 வயது நபர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலணியை சார்ந்தவர்பன்மலி ப்ரமணிக் வயது 40. இவர் தனது அண்டை வீட்டைச் சார்ந்த ப்ரொபிலா ராய் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். இந்தத் தொகையை அவர் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தவில்லை என […]