துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார். துணை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இன்று ஜிப்மர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, துணை ஜனாதிபதி இங்குள்ள மத்திய நிர்வாக ஜிப்மரில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் […]

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி அறிமுகமாகி இருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்களிடம் பேசி அவர்களின் புகைப்படங்களை வாங்கி உடலமைப்பிற்கு […]

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே இருக்கின்ற கணுவா பேட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசி சென்றது. இதனால் நிலைகுலைந்த அவரை அந்த கும்பல் மீண்டும் […]

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே மனதிற்கு ஒரு சந்தோசமான நிகழ்வு தான். அப்படி அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சார்ந்த திமுக எம்.எல்.ஏ. இவர் பாண்டிச்சேரியில் அப்புறம் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு செய்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பாண்டிச்சேரி மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் சம்பத். இவர்தான் பாண்டிச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு தனது செயலின் மூலம் இன்ப அதிர்ச்சியை […]

புதுச்சேரியில் பூர்ணாங்குப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவர்கள் கடல், ஏரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குளிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான ஒரு நிகழ்வு. அப்போது எதிர்பாராத விதமாக நிகழும் சில சம்பவங்கள் துயரமான ஒன்றாக அமைந்து விடும். அப்படி ஒரு சம்பவம் தான் […]

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.  அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான கீர்த்தி, இது பற்றி நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த […]

அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை என்பது ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் கடுமையான சட்டங்களை அரசாங்கம் இயற்றி வந்தாலும் அதனை […]

தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயலின் காரணமாக, ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு அவ்வப்போது அமைச்சர்கள் அதிகாரிகள் என்று பலரும் தமிழக முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் சென்ற வருடங்களில் மழை காலங்களில் இருந்த தொந்தரவு எதுவும் தற்போதில்லை என்று சொல்லப்பட்டாலும் கூட, ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கத்தான் செய்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஊடகங்கள் கண்டு […]

வரும் தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கு பதிலாக அரசு ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு சமமான தொகை அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் […]