2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று […]

ராகுல் காந்தி சிறை தண்டனை தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது‌. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதுடன், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் […]

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. இந்தநிலையில் ராகுல் […]

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். கிரண்குமார் ரெட்டி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவர் […]

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆர்.துருவநாராயணா காலமானார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான ஆர் துருவநாராயணா காலமானார். அவருக்கு வயது 61. மூத்த காங்கிரஸ் தலைவரான இவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று காலை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருவநாராயணா 15 […]

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை திறப்பதற்கான தேதியை பகிரங்கமாக வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது, இங்கு மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று […]

டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மக்களை ஒன்றும் திரட்டும் வகையில் “இந்திய ஒற்றுமை” பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது. ஜனவரி 26 ஆம் […]

பொதுவாக பாஜகவினர் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழி பெயர் வைத்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா; பா.ஜ.க அரசு தான் `பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. திறமையின்மையைக் குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் காட்டுகிறது. நாட்டில் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில், கடந்த 26 மாதங்களில் இல்லாத […]

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 89 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன நகர்ப்புறங்களில் 3311 வாக்குச்சாவடிகளும் கிராமப்புறங்களில் 11 ஆயிரத்து 71 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 89 […]