2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-2026ம் கல்வியாண்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரியில் சேர்க்கை […]

மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய கட்டிடங்களை வரன்முறை படுத்த கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு. தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. […]

ஒருமாத கோடை விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி, தமிழகத்தில் நாளை (ஜூன் 2)ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால், சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பார்கள், இதுமட்டுமல்லாமல், முதன்முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளிடம் ஒருவித பயம் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று பெற்றோர்கள் குழம்பி இருப்பார்கள். கவலை வேண்டாம், இந்த டிப்ஸை பாலோ செய்து குழந்தைகளை சரியான திசையில் வழிநடத்துங்கள். யூனிஃபார்ம், பேக், லஞ்ச் […]