குழந்தைகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கும் முன், அது பாதுகாப்பானதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது மிகவும் அவசியம். கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற எண்ணெய் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அது குழந்தைகளின் உடல்நலத்தில் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செங்குன்றம் காவல் நிலையத்தில் […]

வீட்டில் தினமும் டீ போடும் பழக்கம் இருந்தாலும், சில நேரங்களில் கடையில் கிடைக்கும் டீயின் சுவையும் மணமும் வீட்டில் கிடைப்பதில்லை என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், டீயின் சுவை பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. எந்தப் பொருளை முதலில் சேர்க்கிறோம், எவ்வளவு நேரம் கொதிக்க விடுகிறோம் என்பதும் முக்கியம். சில எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால், வீட்டிலேயே நல்ல நிறம் மற்றும் மணத்துடன் சுவையான பால் […]

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2025-ஆண்டு தீபாவளிப்பண்டிகை 20.10.2025 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற […]

தமிழில் பெயர் பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளின்படி, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், […]