தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாகவே காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]
Tamil Nadu
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். உலக நாடுகளில் இப்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆரோக்கியத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் ஆறாத ரணமாக மாறியுள்ளது. அந்த பாதிப்புகளே முழுமையாக விலகாத நிலையில், உலகளவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க […]
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில், அவரது பயணத்தை முன்னிட்டு சென்னை மற்றும் மதுரையில் வைக்கப்பட்ட பேனர்கள், அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. “எங்க தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு Out of Control தான்”, “டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது” போன்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது அவர், “தமிழ்நாடு […]
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, இன்று காலை பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் காயமடைந்த ஷைன், அவரது தாயார், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஷைன் டாமின் குடும்பத்தினர் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது. அவர்களின் […]
ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு 17 மாநிலங்களில் கைவரிசையை காட்டி வந்த இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு மோசடி கும்பலை கைது செய்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தரம்பால் சிங் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பணிகளைப் போலவே இணையதள பக்கங்களை உருவாக்கி அவற்றில் வேலை வாய்ப்புகளை பற்றிய விபரங்களை பகிர்ந்து அதன் மூலம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக […]
தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தென் மண்டல பசுமை தீர்ப்பாணயத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எல்லை பகுதிக்குள் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகளில் கடத்திவரப்பட்டு கூட்டப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்பட வேண்டிய மருத்துவ கழிவுகளை ஆள் வரவும் இல்லாத […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான […]
2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், சபாநாயகர் அப்பாவு உரையை தமிழில் படிக்கவிருக்கிறார். இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் மதியம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் […]
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் […]