தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை […]
temple
திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் […]
தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இந்த திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அப்போது திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருக்கின்ற உன்மத கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் சுமார் 300 வருடங்கள் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் இருக்கிறது. […]
பல கோவில்களில் செல்போனில் படம் எடுப்பதை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்றும் அரசு தெறிவித்துள்ளது. நாம் எடுத்துச் செல்லும் செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் பின்னர் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து […]
தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஜபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், பரிசாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 15 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ளது. கடலோரத்தில் வீற்றிருக்கும் செந்தில்நாதனை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் புனித தன்மையை காக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இனி பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. வழக்கு ஒன்றை விசாரித்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன. இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் ஒரு குழியில் ஒரு பை இருப்பதனை மக்கள் கண்டனர். அந்த பையில் கோயிலில் […]
அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது. அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் , தெய்வானை என பத்து சுவாமி சிலைகளையும் கடந்த ஆண்டு 2018 ல் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலை தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. நிம்மாளியம்மன் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் உள்ளது. இக்கோவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த நிலையில் தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்திருக்கின்றன. நேற்று இரவு அம்மன் கோவிலின் கேட்டை நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த 7 அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை தீவைத்து […]