fbpx

நாகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய போது, நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், நாகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் ரூ.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப் பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாகை …

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழ்நாட்டை மாற்றி விடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழகத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு …

5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டி அவர்களைத் தனிப் பிரிவில் இருக்க வைத்து, சிறந்த மருத்துவர்கள் மற்றும் …

ஆதார் போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

“மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும் விவசாயிகள் பெற, அவர்களுக்கு ஆதார் எண் போன்று தனித்துவமான மின்னணு முறையில் தேசிய அளவிலான அடையாள அட்டை எண் வழங்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்ட …

இம்மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் பயணச்சீட்டு கருவி பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் கடந்த ஆண்டு பிப்.28-ம் தேதி மின்னணு பயணச்சீட்டு கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கருவி அறிமுகமாகி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்நிலையில், கருவி …

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் …

இசைஞானி இளையராஜா வரும் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.. ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி …

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக இன்று முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, சவ்ம் …

சிறு வியாபாரிகளுக்கான தொழில் உரிம கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வி்க்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசு திடீரென தொழில், வணிக உரிமக்கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியது, வணிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு …

கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது .கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடைபெறும் திருவிழாவையொட்டி, இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. எனவே இதற்காக தேவாலய …