இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,” சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசிவிலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவேமுதல் முறையாகும். அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆகஇருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலைஇப்போது […]
tn government
தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில், பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என அரசு வெளியிட்ட […]
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு,பதக்கமும் அடங்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த, துலசிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்தபெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். 2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவானதன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in […]
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில் நடைபெற இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை […]
12-ம் தேதி பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் […]
தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலைக் குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் […]
ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச் சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச் சான்றை அளிக்க ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். இணைய சேவை மையங்கள், அஞ்சல் வழி, கருவூலகணக்குத் துறையில் நேரடியாக சமர்ப்பித்தல் உள்ளிட்ட வழிகளில் வாழ்வுச் […]
தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது புதிய மின் கட்டணத்தின் படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டதால் மின் கட்டணத்தை செலுத்த இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் மின்சார வாரியத்திற்கு 1,65000 கோடி கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் எதிர்வரும் 5 வருடத்திற்கு ஆண்டுக்கு 6%முதல் 5 வருடங்களில் […]
Probability இன்று சொல்லப்படும் நிகழும் தகவை கையாள்வதற்காக தமிழக அரசின் பாட புத்தகங்களில் பகடை மற்றும் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளனர். அதில் சீட்டுக்கட்டு கணக்குகள் மாணவர்கள் இடையே தவறான எண்ணத்தை உண்டாக்குவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்தும் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு பாடத்தில் சீட்டு கட்டு குறித்த 5 […]
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEG திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள்துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் ,மானியத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் […]