தமிழகம் முழுவதும் சென்ற மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து முடிந்தனர். அதன் பிறகு தற்போது வரையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் […]
tn government
சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன் 10 கிராம் (22 […]
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் […]
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 […]
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும்எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடன் உதவியோடு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் […]
திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள் உள்ளது. இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் […]
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் […]
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம் தோறும், முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும். அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம் வரும் 9-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். 2023-24-ம் கல்வியாண்டில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதையும், அனைத்து வகை அரசுப் […]
தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட […]
தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒரே நாளில்தேர்வும், ஒரே நாளில் தேர்வு முடிவுகளும் வரும் ஆண்டு […]