கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்குடன்‌ தமிழ்நாடு அரசு புலம்‌ பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ குறைந்தது 2 ஆண்டுகள்‌ பணி புரிந்து கோவிட்‌ 19 பெருந்தொற்றுப்‌ பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌ சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்து கடனுதவி பெற்றுப்‌ பயன்‌ பெறலாம்‌. அவர்கள்‌ கோவிட்‌ 19 […]

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சிகள்‌ ஆணையர்‌ அவர்களது அறிவுரைகள்படி தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ 01.05.2023 அன்று காலை 11.00 மணி முதல்‌ நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி செயலாளர்கள்‌ மேற்படி நாளில்‌ கிராம சபை கூட்டம்‌ நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்ய வேண்டும். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும்‌ ஒரு பற்றாளரும்‌, […]

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகத் தொடங்கினர். ஆகவே கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில் இதுவரையில் 658 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விடவும் இது 484 டிஎம்சி கூடுதல் நீர் எனவும் […]

தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக மின் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடல் அதிமுக ஆட்சி காலத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்துறை பல சிக்கல்களை சந்தித்து வருவதால் இதனை தடுப்பதற்கு அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்கம்பங்கள் மின் சாதனங்கள் மற்றும் […]

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால்‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ விற்பனை விலையை விட கூடுதல்‌ விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும்‌ புகார்களை […]

சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும்‌ இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்‌ பொருட்டு “முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது” ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தினத்தன்று 15 வயது முதல்‌ 35 வயது வரை உள்ள 3 ஆண்கள்‌ 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம்‌, பாராட்டுப்‌ பத்திரம்‌ மற்றும்‌. பதக்கம்‌ ஆகியவைகளை உள்ளடங்கியதாகும்‌. 2023-ஆம்‌ ஆண்டிற்கான முதலமைச்சர்‌ மாநில இளைஞர்‌ விருது எதிர்வரும்‌ 15.08.2023 அன்று நடைபெறும்‌ சுதந்திர தின […]

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழுவதுமே வார இறுதியில் தொடர்ந்து விடுமுறைகள் விடப்பட்டு வந்தனர். தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்சமயம் தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டதால் வெளியூர்களில் பணியாற்றும் […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர்‌ மற்றும்‌ தொடக்க கல்வித்துறை இயக்குநர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ பொது மாறுதல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தற்போது பணிபுரியும்‌ பள்ளியில்‌ ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும்‌ என்ற நிபந்தனை கடைபிடிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்‌ கலந்தாய்வினை […]

தமிழகத்தில் இணையதள சூதாட்டத்தில் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளது. ஆகவே இணையதள சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பினார் இத்தகைய நிலையில், திருத்தம் செய்யாமல் மறுபடியும் தமிழ்நாடு சட்டசபையில் இந்த சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆளுநர் ரவி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஆகவே தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது […]

தமிழகத்தில் விபத்துக்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நாள்தோறும் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு விபத்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதிலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் லாரி உள்ளிட்ட கதாநாயக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் இது போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இந்த விபத்துக்களை தடுக்கும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் […]