கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் […]

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 18 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 2016 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு, 9 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இதனால், 93,000 ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் […]

ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று முன்தினம் ( 04.09.2025) வியாழக்கிழமை கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான 04.09.2025 வியாழக்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு […]

இஸ்லாமிய மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.36 லட்சம் வீதம் ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி தொகை வழங்குகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்புகளைப் படிப்பதற்கு உதவும் புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான […]

நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர், மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் […]

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் செப்டம்பர் 8-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தக் முகாமில், ஆசிரியர்களுக்கு மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கான […]

சட்டப்பேரவை அறிவிப்பின் பேரில் துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணைத்தொகை வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, EPF ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900/- முதல் ரூ.2,190/- வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத் […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]