ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களின் வருகைப்பதிவு குறைந்தால் ரூ.1000 அபராதம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 643 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பி.எட் பட்டப்படிப்பில் முதல் பருவம் மற்றும் எம்.எட் பட்டப்படிப்பில் முதல் மற்றும் 3ஆவது பருவத்தில் படிக்கும் மாணவர்கள் 100 நாட்கள் வருகைபுரிய வேண்டும். பி.எஸ்சி, பி.எட்; பி.ஏ பி.எட் […]

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் […]

தமிழ்நாடு முழுவதும் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அரசின் கொள்கை குறிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்ணாடி இழை வடம் மூலம் அதிவேக இணைய இணைப்புகளை உறுதி செய்வதில் பாரத் நெட் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நெட் மாநிலத்தில் உள்ள அனைத்து நகர்புறங்களையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. TNSWAN, BHARATNET மற்றும் TAMILNET ஆகியவற்றை […]

அரசின் இனி எல்லாமே ETender-ல் தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் பாக்ஸ் டெண்டர்களால் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி ஆன்லைன் இரண்டரை கொண்டு வர வேண்டும் என திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ஆட்சிக்கு வந்தால் ஆன்லைன் டெண்டர் முறையை கொண்டு வருவோம் என திமுக உறுதியளித்திருந்தது அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்துக்கு வழி வகுக்கும் […]

ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் -ரூ.10,000/- உதவித் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த தமிழக அரசால் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் […]

பத்திரப்பதிவு கட்டணம் 4 % தில் இருந்து 2 % சதவிகிதம் குறைத்து அறிவிக்கப்பட்ட நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். அப்போது இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத்தீர்வை, சொத்து மாற்று வரி 2 %, பதிவுக் கட்டணம் 2 % செலுத்த வேண்டும். எளிய நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கிக் […]

பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் கிடைக்காத பட்சத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் வழங்கப்பட்டு வந்தது. நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு […]

தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஐ.பெரியசாமி ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 13 தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3600-லிருந்து ரூ.5000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவு வேளாண்மை வசதிகளை அருகில் உள்ள நகர்ப்புறங்களுடன் […]

தமிழகம் முழுவதும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் வாரத்திலிருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இத குறித்து அவர் தனது ட்விட்டரில் , “தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி விட்ட நிலையிலும், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் […]

நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் […]