தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம்‌ என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 […]

தமிழ்நாடு அரசு எஸ்‌.சி. மற்றும்‌ எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்களுக்கு சிறப்பு திட்டமாக அண்ணல்‌ அம்பேத்கர்‌ வெல்லும்‌ தொழில்‌ முனைவோர்‌ பிசினஸ்‌ சாம்பியன்ஸ்‌ திட்டத்தை தமிழக அரசு இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில்‌ சட்டமன்றத்தில்‌ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஆர்வமுள்ள எஸ்‌.சி. மற்றும்‌எஸ்‌.டி. பிரிவு தொழில்‌ முனைவோர்‌ தொடங்கவிருக்கும்‌, உற்பத்தி, வணிகம்‌ மற்றும்‌ சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில்‌ திட்டங்களுக்கும்‌ வங்கி கடன் உதவியோடு மானியம்‌ வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ […]

திருக்குறள் முற்றோதல்‌ செய்யும்‌ மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள்‌ உள்ளது. இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ […]

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் […]

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்‌; அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ மாதம் தோறும்‌, முதல்‌ வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும்‌. அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம்‌ வரும்‌ 9-ம் தேதி பிற்பகல்‌ 3 மணி முதல்‌ 4.30 மணிவரை கட்டாயம்‌ நடத்தப்பட வேண்டும்‌. 2023-24-ம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி இடைநிற்றல்‌ இல்லாமல்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ படிப்பை தொடர்வதையும்‌, அனைத்து வகை அரசுப்‌ […]

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட […]

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும்‌ பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள்‌ மற்றும்‌ தேர்வு முடிவுகள்‌ வெவ்வேறு தேதிகளில்‌ வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ ஒரே நாளில்‌தேர்வும்‌, ஒரே நாளில்‌ தேர்வு முடிவுகளும்‌ வரும்‌ ஆண்டு […]

அரசு பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரித்திட விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தொடக்கக்‌கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய , நகராட்சி,அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலை பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை குறைவாக உள்ளது. நம்‌பள்ளிகளில்‌ 2023-24ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட வேண்டும்‌. 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌, அரசு பள்ளிகளில்‌ மாணவர்‌ […]

கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்‌. அவர்கள்‌ கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலினால்‌ 04.01.2020 அன்று அல்லது அதற்கு […]

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மற்ற 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள […]