தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி B.Sc Agriculture, M.Sc., அல்லது B.Sc., Horticulture முடித்திருக்க வேண்டும். . பணிக்கு ரூ.37,700 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும். […]
tnpsc exam
தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் பொறியியல் மற்றும் அதனை சார்ந்த ஒருங்கிணைந்த பிரிவுகளில் 1083 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்காக தேர்வு எழுத விருப்பப்படுவோர் இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துறைகளில் இளநிலை வரைவாளர், வரைவாளர், போர் மேன் உள்ளிட்ட பதவிகளுக்காக 1083 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பதாரர்கள் […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. […]
குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18-ம் […]
தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி குருப் ’5 ஏ’ வில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (விரித்துரைக்கும் வகை) வருகின்ற 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு […]
சிறை அலுவலர் பணித் தேர்வு வரும் வரும் 26-ம் தேதி தமிழகத்தில் 24 மையங்களில் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழகத்தில் 7 மையங்களில் கம்ப்யூட்டர் […]
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலி பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுரை வழங்கி உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளங்களில் […]
தமிழகத்தில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பார்க்கலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5,520 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.94 லட்சம் பேர் எழுதினார்கள். மகளிருக்கான 30 சதவீத […]