மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சார்ந்தவர் ராஜா வயது 30. இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவியும் ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். உள்ளூரில் […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. பயணிகளின் பாதுகாப்பு, ரயிலின் வேகம், பெட்டியின் வடிவமைப்பு, உணவு, பானங்கள் போன்றவற்றை ரயில்வே வழங்கி வருகிறது.. இதை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளையும் ரயில்வே வழங்க உள்ளது. ஆம்.. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படும். ரயிலில் பயணிக்கும்போது சளி, சளி, காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற […]

சென்னை, எழும்பூர், காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பல்லவன் விரைவு ரயில் வரும் 16ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் அதற்கு இடைப்பட்ட காலங்களில் 13 நாட்களுக்கு காரைக்குடி, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்கு இடையே 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன என்று தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 10.05 மணிக்கு […]

பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 271 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 271 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 60 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் ஜான்சி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது பெற்றோர் திட்டியதால் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார்.  ரயிலானது எட்டாவாவை சென்றடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம்.  இந்த நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.  இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்‌ஷாயினி என்பது தெரியவந்துள்ளது. மைலராப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இறப்பதற்கு முன் எழுதியிருந்த […]

ரயில்வே சொத்துக்கள், பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாதவாறு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை ஆர்பிஎப் அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையின் போது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த […]

வானிலை காரணமாக 266 ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, இன்று காலை புறப்பட வேண்டிய 266 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன, மற்ற ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, […]

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் நேர ரயில்களின் முன்பதிவு நீக்கப்பட்ட பெட்டிகளுக்கு ஸ்லீப்பர் டிக்கெட் வழங்கப்படும். கேரளாவில் இருந்து […]