திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பாலக்கரை அருகில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதிகள் கிருஷ்ணன் (91) மற்றும் மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் என்பவர் மண்ணச்சநல்லூர் மகன் வீட்டிலும் மற்றும் சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் பகுதியில் மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் வயது […]

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள நம்பர் 1 டோல் கேட் அருகில் கூத்தூர் கிராமத்தில் செல்வமணி தனது மகன் அய்யப்பன் (22) வசித்து வருகிறார். மகன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.  துக்க வீட்டிற்கு சென்ற மகன் இறந்த நபரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதற்கு மின் இணைப்பை கொடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் […]

துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு ஈமக்கடன்கள் ஒரு பக்கம் நடந்து வந்தன. குளிர்பதன பெட்டிக்கு கூறப்பட்டதை அடுத்து அமரர் […]

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை பார்த்து கத்தி கதறி அழுத தினேஷ்குமார் சட்டென்று அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார்.  […]

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் அலட்சியப்போக்கான சிகிச்சையால் உயிரிழந்தார். இந்நிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திடீரென சிறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது. திருச்சியில் அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த […]

திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது. திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார். ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் அந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த கடையை […]

திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் ராஜாவிடம் கூறிய போது அவர் குடுத்த மொத்த […]

குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார். ’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனபோதும் கே.பாலச்சந்தரின் திரைப்படம்தான் இவருக்கு […]

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களில் […]