அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளாலேயே கட்சி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் வெற்றிபெற்ற 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், தலைமை எடுத்த தவறான நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். […]

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எடப்பாடி அடாவடி செயல்பாடுகளால் அதிமுக மூத்த தலைவர்கள் திமுகவுக்கு செல்வது துரதிர்ஷ்டவசமானது. பழனிசாமியை வீழ்த்தவே அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரிய கட்சி இல்லை.. நாங்கள் வளர்ந்து வருகிறோம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளை சேர்ந்தவர்கள் […]

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதை வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.. மேலும் இபிஎஸ் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக […]