அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இந்த மோதல் மீண்டும் தீவிரமடைவதற்கு “வாய்ப்பு அதிகம்” என்றும், அமெரிக்கா ஒப்பந்தங்களை மதிக்கத் தவறிவிட்டது என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் இராணுவத் தலைமையகத்தின் துணைத் தலைவர் முகமது ஜாஃபர் அசாதி, வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கைகளும் அறிக்கைகளும், இராஜதந்திர முயற்சிகளுக்கு உண்மையான அர்ப்பணிப்பு இல்லாததையே […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்; மேலும், மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் காப்பாற்றுவதற்காகவே ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்தினார். புளோரிடாவில் உள்ள ‘தி வில்லேஜஸ்’ (The Villages) பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டால், […]

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான ஈரானிய தூதுக்குழு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று அதிகாலையில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்தது. அதேவேளையில், அமெரிக்கர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படாது என்று ஈரான் தெரிவித்திருந்தது. வந்தடைந்ததும், ஈரானிய தூதுக்குழுவை பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர். மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சமீபத்திய […]

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன், சுயநினைவுடன் மற்றும் பேசும் நிலையில் இருக்கிறார், ஆனால் முகம் மற்றும் உதடுகளில் ஏற்பட்ட தீக்காயங்கள் உள்ளிட்ட கடுமையான காயங்களால் பெரும்பாலும் படுக்கையிலேயே இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் அவரால் நகரவோ பேசவோ முடியவில்லை. உச்ச தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, மொஜ்தபா பொதுவெளியில் தோன்றவோ அல்லது அவர் பேசுவதைக் கேட்கவோ இல்லை. பிப்ரவரி 28 அன்று, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் […]

“ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள், ‘வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டு, ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக’ ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-(IRGC) யால் கைப்பற்றப்பட்டு, ஈரானுக்குக் கொண்டு செல்லப்படுவதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “தேவையான அனுமதிகள் இல்லாமல் இயங்கியும், வழிசெலுத்தல் அமைப்புகளைக் கையாண்டும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களான ‘எம்.எஸ்.சி-ஃபிரான்செஸ்கா’ (சியோனிச ஆட்சியுடன் தொடர்புடையது) மற்றும் ‘எபாமினோடெஸ்’ ஆகியவை ஐ.ஆர்.ஜி.சி கடற்படையால் கைப்பற்றப்பட்டு ஈரானின் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் மற்றும் அதன் தலைவர்களுடன், குறிப்பாக ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீருடன், இருந்த நெருக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் முனீரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.. முனீரை ஒரு ‘அற்புதமான’ நபர் மற்றும் ‘சிறந்த போராளி’ என்று டிரம்ப் அழைத்தார்… பிப்ரவரி 28 முதல் மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியதற்காகவும் அவருக்குப் பெருமை […]

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இஸ்ரேலை “மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு மற்றும் ஒரு புற்றுநோய் அரசு” என்று கடுமையாக சாடி உள்ளார். இந்த கருத்துக்கள், நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குவாஜா ஆசிஃப் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் லெபனான் மற்றும் மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளில் நடக்கும் மோதல்கள் தொடர்பாக ஆசிஃப் இஸ்ரேலைத் விமர்சித்து பேசினார். காசா, […]

ஈரான் போரில் ஏற்பட்ட போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையில் இது ஒரு தீர்க்கமான இராணுவ வெற்றி என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே, ஈரான் இந்தப் போர்நிறுத்தத்திற்காக கெஞ்சிக் கேட்டதாக அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி டிரம்ப் வரலாற்றைப் படைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய […]

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப பிறகு மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.. ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று அது […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]