காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை அனுமதியின்றி ஆபாச நோக்கத்தில் வீடியோ பதிவு செய்ததாக 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்த மாணவியை, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போல நடித்து அந்த நபர் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை அருகில் இருந்த மற்றொரு மாணவி கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவளின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை […]

கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.. டிரைவராக வேலை செய்து வரும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அட்சயா என்ற பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளனர். 30 வயதான அட்சயா, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இந்த தம்பதிக்கு 5 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தர்மராஜ் டிரைவராக வேலை செய்து வருவதால், அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த […]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக் குளியலறையில், பெண் ஒருவர் குளிப்பதை வாலிபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள பெண்களுக்கான பொதுக் குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, வெளியே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ பதிவு […]

இந்தியாவின் பொருளாதார சக்தியாகவும், துடிப்பான நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மும்பை, 2008 நவம்பரில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். நவி மும்பை விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், 26/11 தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் இராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்ததாக ஒரு நேர்காணலில் கூறிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான […]

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]

கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.. வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது… இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் […]

ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]