புனேவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், அதே நிறுவனத்தில் படித்து வரும் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு அதே நிறுவனத்தின் முன்னாள் மாணவியும் உதவியுள்ளதாக காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே மாவட்டத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர், கடந்த ஜனவரி 30ஆம் தேதி, 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அப்போது யாத்திரை சென்ற காங்கிரஸ்காரர்கள் மீது பாரதிய ஜனதா கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் […]

மும்பையின் செம்பூர் பகுதியில் இயங்கி வரும் சதாப்தி கல்லூரி மருத்துவமனை விடுதியில் பெண் டாக்டர் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்ததாக துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பை சதாப்தி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருபவர் அசோக் குப்தா. இவர் அந்தக் கல்லூரியில் […]

இந்தியாவில் புல்லட் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை பற்றியும் புல்லட் ரயில் சேவைகள் இயற்கை இருக்கும் மற்ற நகரங்கள் பற்றிய அறிவிப்பையும் ரயில்வே துறை வெளியிட்டிருந்தது. மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இருக்கும் 58 கிலோ மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் மூலம் இரண்டு மணி நேரத்தில் […]

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மருமகள் சாலையில் நின்று ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கௌடா தற்போது ஜனதா தல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1996-97 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். கர்நாடக மாநில முதல்வர் பதவியிலும் வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. An undated, purported […]

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தாலும் அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவது மிகப்பெரிய எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற எதிர் விரைவுகளின் ஓர் அங்கம் தான் டீப் ஃபேக். தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் ஐடி துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரது உருவம் […]

மழைக்காலங்களில் பேருந்தில் மழை நீர் கசிவது தொடர்பாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ விமானங்களின் தரம் குறித்து மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் நகருக்கு பயணம் மேற்கொண்ட ஏர் இந்தியா விமானத்தில் தான் இந்த மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ […]

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு வருடத்திற்கு முன்னர் லக்சாம்பூரில் இருக்கின்ற தன்னுடைய தாத்தா வீட்டில், தங்கி படித்து வந்தார். […]

தமிழ்நாட்டைச் சார்ந்த கலெக்டர் ஒருவர் உதவியாளரை தனது காலணிகளை தூக்கி வருமாறு கட்டளையிட்டதாக வெளியான வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர் சரவணகுமார் ஜதாரவத் கோவிலுக்குள் சாமி கும்பிட சொல்லும் போது தனது காலணிகளை உதவியாளரிடம் தூக்கி வரச் சொல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பதிலளித்துள்ள கலெக்டர் தான் அப்படி கூறியதாக சொல்வது பொய் […]

மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளியை அழுகிய காலுடன் வெளியில் வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குட்பட்ட சாலை பகுதியில் பிரகாஷ் என்ற கூலி தொழிலாளி கால்களில் புண்களுடன் சாலை ஓரத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை […]