அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க […]
viral
உலக சினிமாவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விருதை ஒரு முறையேனும் வாங்க வேண்டும் என்பது அவர்களது திரை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயது குழந்தையை மாடு ஒன்று முட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. குழந்தைகளை பொறுப்பில்லாமல் பொது இடங்களில் விட்டுச் செல்வது பல நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவே அமையும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் உள்ள காந்தி பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமானந்த் காலனியைச் சார்ந்த முதியவர் ஒருவர் இரண்டரை வயது பெண் குழந்தையை […]
ஆன்லைன் மூலம் நாம் ஆர்டர் செய்யும் போது நாம் ஒரு பொருளை ஆர்டர் செய்திருக்க அவர்கள் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை அனுப்பி வைப்பார்கள் இது ஆன்லைனில் அவ்வப்போது நடக்கும் வாடிக்கையான ஒரு விஷயம். ஜோமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்த ஒரு பெண்ணுக்கு இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதை அவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் போட்டு இதுகுறித்து […]
சில நேரங்களில் இயற்கையின் மூலமாக வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அது போன்ற வினோதமான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இது அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தன் கர் என்ற நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஹிசாரி சிங் என்ற 19 […]
கடலூரில் ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த பெண் தனது காதலன் டாஸ்மாக்கில் மது போதையில் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவரை எட்டி உதைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி அருகேயுள்ள ஷாப்பிங் மாலுக்கு பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார். அப்போது அவரது காதலன் ஷாப்பிங் மால் அருகிலுள்ள டாஸ்மாக் மது கடையில் மது அருந்திவிட்டு போதையில் இருந்திருக்கிறார். இதனைக் […]
தமிழகத்தைச் சார்ந்த அக்ஷய் என்ற இளைஞர் தனது தாத்தாவை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி சினிமா ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சார்ந்த சினிமா ரசிகரான இவர் ட்விட்டரில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்திருக்கிறார் இந்நிலையில் தனது தாத்தாவின் டைரியில் இருந்த சில பக்கங்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் இந்த இளைஞர். இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி […]
திருமணநாள், பிறந்தநாள் ஆகியவற்றிற்கு போஸ்டர் ஒட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன்முதலாக ஒரு நபர், தான் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுகள் நிறைவடைந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், தமிழகத்தில் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பக்தவச்சலம் நகர் பகுதியைச் சார்ந்தவர் மனோகரன் 53 வயதான இந்த நபர் கடந்த 32 […]
திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் குடிமகன் ஒருவர் ரசீது கேட்டு ரகளையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் வைரலாகியுள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு மதுவை விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டி அந்த நபர் தனக்கு ரசீது வழங்காவிட்டால் டாஸ்மாக் மேலாளரை கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டேன் என மிரட்டும் தோனியில் பேசியிருக்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்கொழுந்து மேற்பார்வையில் […]
தற்பொழுது வைரலாகி வரும் வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று தூணில் ஏறியது. அப்போது பாம்பு படுத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏறுவதை பார்க்க முடியும். இந்த பாம்பு சுமார் 20 அடி உயரம் உள்ளதையும் காணொளியில் காணலாம். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @snake._.world இன் Instagram கணக்கில் பகிரப்பட்டது. இது ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றது. மேலும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கருத்துக்களை […]