2020-ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் வெடித்த கோவிட்-19 தொற்று இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கிறார். அவர் உருவாக்கிய காமிக்ஸ்கள் மூலம் அல்ல, உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதில் இவருக்கு “ஜப்பானிய பாபா வாங்கா” […]
virus
இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். […]
புதிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் முதல்வர் என் ரங்கசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த வாரத்தில் சுமார் 400 […]
நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 19 மாணவர்கள் நோரோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில பெற்றோர்களுக்கும் இதே நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இங்குள்ள காக்கநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று குழந்தைகள் தற்பொழுது […]
ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, […]
மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட SOVA வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், உருவாக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றை உடைத்து ஊடுருவப் பல வைரஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது […]