புற்றுநோய் என்றாலே வயது முதிர்ந்தவர்களுக்கே ஏற்படும் நோய் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், இந்தியாவில் 30 வயதுகளிலும் 40 வயதின் தொடக்கத்திலும் உள்ளவர்களிடையே புற்றுநோய் கண்டறியப்படும் சம்பவங்கள் குறித்த கவனம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், இளம் வயதினரிடையே உண்மையாகவே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறதா அல்லது மருத்துவ விழிப்புணர்வு மற்றும் நவீன பரிசோதனை முறைகளால் முன்பு கண்டறியப்படாத பாதிப்புகள் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. […]