இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]
Water
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 188 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை […]
புழல் ஏரிக்கு நீர்வரத்து, 353 கனஅடியில் இருந்து 283 கனஅடியாக சரிந்துள்ளது . நீர்இருப்பு 2266 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 93 கன அடியில் இருந்து 46 கனஅடியாக சரிவு; நீர்இருப்பு 346 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 200கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 414 […]
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிருஷ்ணகிரி கோட்டத்தின் மூலம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைதுறை தருமபுரி – ராயகோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் […]
நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.. இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. அதில், குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் கழிவு […]
மொத்தம் 11.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின்கீழ், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் […]
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் மீண்டும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறியதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தாயூரில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதாக வெளியான செய்தி தமிழகத்தையே உலுக்கியது. இதே மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை ஜாதிப் பெயர் சொல்லி திட்டித் தாக்க முயன்ற தீண்டாமைக் கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மங்களநாடு […]
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பேரிடர் நிவாரண அமைப்பு, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை, பொதுமக்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது எப்படி ? என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் பத்தனம்திட்டா அருகே உள்ள கல்லுப்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. நீச்சல் தெரிந்த 4 பேர் ஒத்திகையில் பங்கேற்க அங்கு அழைத்து வரப்பட்டனர். இதில் பினு சோமன் (35) […]
இந்திய தர நிர்ணய அமைவன தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி பி.பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஐ எஸ் ஐ முத்திரைகளை குடிநீர் பாட்டில்களில் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன்படி 12000 (1 லி, 2 லி, 500 மில்லி, 300 மில்லி) குடிநீர் பாட்டில்கள் மற்றும் 4 அட்டைப் பெட்டிகளில் ஐஎஸ்ஐ முத்திரை வில்லைகள் […]
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் […]