நிர்வாக குளறுபடிகளால் திமுக அரசு டெல்டாவின் கடைமடைப் பகுதிகளை வறட்சியில் தவிக்க விட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 12-ம் தேதி காவிரியிலிருந்து நீர் திறக்கப்பட்டிருந்தாலும் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நீர் இன்னும் முழுமையாக வந்து சேராததால் குறுவைப் பயிர்கள் காய்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. […]

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]

நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]

மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு […]

இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீர் தகராறைத் தீர்க்கவும், சிந்து நதிப் படுகையின் ஆறு முக்கிய நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளவும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 இல் கையெழுத்தானது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, […]

விக்கல் வரும்போது “ஐயோ, யாரோ என்னைப் பற்றி நினைக்கிறார்கள்” என்று நினைத்து மகிழ்ச்சியடைபவர்கள் பலர் இருக்கிறார்கள். விக்கல் பொதுவாக அனைவருக்கும் ஏற்படும். அவை வரும்போது, ​​அவை விரைவாக நீங்காது. சிலர் அவற்றைப் போக்க நிறைய தண்ணீர் குடிப்பார்கள். சிலர் வேறு விஷயங்களைச் சொல்லி அவற்றைப் புறக்கணிக்க முயற்சிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், அவர்களுக்கு விக்கல் வரும்போது, ​​நாம் நினைப்பது வேறு காரணங்களால் அல்ல. அவை வருவதற்கான உண்மையான காரணத்தை விஞ்ஞானிகள் […]

முட்டை வேகவைத்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடல் நலத்திற்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளவை. முட்டை வேகவைத்த நீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால், அவை நன்கு வளரும். குறிப்பாக, ரோஜா செடிகள் மற்றும் பூச்செடிகளுக்கு இது மிகவும் நல்லது. மேலும், இந்த நீர் மண்ணின் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. தலைமுடியின் […]