கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]
women
இந்திய மரபுகளில் பல விஷயங்கள் வெறும் ஃபேஷன் அல்லது அலங்காரம் போலவே தோன்றுகின்றன, ஆனால் உண்மையில், அவற்றின் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் மறைந்துள்ளது. புதுமணப் பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் காலில் கொலுசு அணிவதையும், சில பெண்கள் கருப்பு நூலையும் பயன்படுத்துவதையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை, ஆனால் அதன் பின்னால் பல நன்மைகள் மற்றும் பரிகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – வரும் 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். […]
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது- ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு,பதக்கமும் அடங்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த, துலசிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்தபெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். 2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவானதன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய விண்ணப்பித்தை https://awards.tn.gov.in […]
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாக வீட்டிலிருந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நெருப்பு வைத்து எரித்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது தலித் பெண் ஒருவரை அப்பகுதியைச் சார்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலில் தீ வைத்து காயப்படுத்தி இருக்கிறார். இறந்த […]
அரியலூர் அருகே இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் வேறொரு நபருடன் தொடர்பிலிருந்து பெண்ணை உறவினர்கள் அந்த நபரிடமிருந்து கூட்டி வந்த நிலையில் தனியாக இருந்த பெண் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலை கடம்பூர் என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தைச் சார்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே […]
பிரிட்டனைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டை வெப்பப்படுத்தாமலேயே வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உண்மை தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பரி என்ற பகுதியைச் சார்ந்தவர் பார்பரா போல்டன் . இவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டில் ஹீட்டர்களை பயன்படுத்தாமல் […]
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள உண்ணியூர் கோணத்தைச் சார்ந்த பெண் தானே ஆல் செட் செய்து தன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியைச் சார்ந்தவர் லதா 45 வயதான இவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகனான சுபாஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக […]
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு துவைத்த துணிகளை காய போடுவதற்காக மொட்டை […]