திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் […]

கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது.  கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். […]

திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண்  கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]

தர்மபுரி மாவட்டம் கங்காபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சின்னபையன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.  இதற்கிடையே ஜெயலட்சுமி ரத்த காயங்களுடன் இரண்டு காதுகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் வயலில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் […]

பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் […]

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இந்த விவசாயி தனது தோட்டத்தில் நேற்று இயந்திரம் மூலம் மக்காச்சோளத்தினை தோகைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பையா மனைவியான காளியம்மாள் (60) என்பவரின் சேலை சோலை அறுக்கும் இயந்திரத்தில் சிக்கியது. இயந்திரத்தில் தலை சிக்கியதால், பலத்த காயமடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிந்த செம்பட்டி போலீசார், […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள சித்தாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். அங்கே தோட்டத்துக்கு வந்த பெண் யானை, தொழிலாளர்களை பயமுறுத்தியது.  இதனால் தொழிலாளர்கள் பலரும் பல வழியில் ஓடிய நிலையில், யானை ஞானவதி (50) என்பவரை மட்டும் மிதித்தது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வனத்துறையினர் ஏதாவது செய்திருக்க வேண்டும் என தொழிலாளர்கள் சிலர் […]

கிஸ்தானின் சின்ஜோரோவில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானின் இந்து சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் செனட்டரான கிருஷ்ண குமாரி, 40 வயது பெண் தலை துண்டிக்கப்பட்டு மார்பகம் துண்டிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி, 40 வயது விதவை கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவளது உடல் மிகவும் சிதைந்துள்ளது.  அவளது தலை உடலில் உள்ள தோல்களிலும் […]

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர் கிண்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் அதே நகரை சேர்ந்த வீரபத்ரன் (40). இவருடன் சங்கரின் மனைவி கோமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சங்கர் தனது மனைவிக்கு போன் செய்து கள்ள உறவு குறித்து எச்சரித்துள்ளார்.  இதையடுத்து […]

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் […]