நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ்வரி அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வழக்கம் போல், விக்னேஷ்வரியின் மாமனார் சந்திரன், மாலை வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் […]

