இதற்கு அங்கீகாரம் பெற ரூ.8,000 கட்டணம் செலுத்த வேண்டும்.‌‌..! இல்லை என்றால் சிக்கல்…! ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌‌.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌,
அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.


விண்ணப்ப கட்டணம்‌ மற்றும்‌ ஆய்வுக்கட்டணம்‌ RTGS/NEFT மூலம்‌ செலுத்த வேண்டும்‌. அனைத்து தொழிற்‌ பிரிவுகளுக்கும்‌ சேர்த்து விண்ணப்ப கட்டணம்‌ ரூ.5,000/- மற்றும்‌ ஆய்வு கட்டணம்‌ ரூ.8,000/- செலுத்த வேண்டும்‌. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌: 28.02.2023. இதற்கு பின்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. மேலும்‌ அங்கீகாரம்‌ குறித்த தகவல்‌ மற்றும்‌ அறிவுரைகள்‌ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

IMG 20230226 050257

Vignesh

Next Post

தவறுதலாக அனுப்பிய Message! இனி Delete for everyone கொடுக்கத் தேவையில்லை!... புதிய வசதியை அப்டேட் செய்யும் வாட்சப்!

Sun Feb 26 , 2023
ஒருவருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை எடிட் செய்யும் வகையில் புதிய வசதியை தற்போது வாட்சப் நிறுவனம் வழங்கியுள்ளது. நாம் அதிகளவில் பயன்படுத்தப்படும் அப்களில் வாட்சப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரம்பக் காலகட்டத்தில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மெசெஜை டெலிட் செய்யவோ, திருத்தவோ இயலாது. சில நாட்களுக்கு பிறகு வாட்சப் சாட் மற்றும் குழுக்களில் அனுப்பும் மெசெஜை டெலிட் ஃபார் மீ அல்லது டெலிட் ஃபார் எவரிஒன் போன்ற தேர்வுகளை பயன்படுத்தி […]
watsapp 1

You May Like