நாளை இவர்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்…! தமிழக அரசு போட்ட திடீர் உத்தரவு…!

tn govt 20251 1

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த நகராட்சிகளில் இருந்து மழைக்கால தடுப்பு பணிகளில் ஈடுபடவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

தீபாவளி பண்டிகைக்கு உங்களால் தங்கம் வாங்க முடியவில்லையா..? அப்படினா செல்வத்தை அதிகரிக்கும் இந்த பொருளை வாங்குங்க..!!

Sun Oct 19 , 2025
இந்து மதப் பண்டிகைகளில் மிகவும் கோலாகலமாக, கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது. தீபாவளியின்போது மக்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்கப் பல்வேறு சடங்குகளைச் செய்வார்கள். இதன் மூலம் லட்சுமியின் நேரடி அருளைப் பெற்று, ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கத்திற்குப் பதிலாக […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like