அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்…! வானிலை மையம் தகவல்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்க கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படும். இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

உஷார்.. உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படலாம்.. மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது..?

Fri Feb 24 , 2023
இந்தியாவில் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஏனெனில் பான் கார்டு இல்லாமல் பெரிய நிதி பரிவர்த்தனைகள் எதையும் மேற்கொள்ள முடியாது.. அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரிகள் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும் பான் எண் அதிகாரிகளுக்கு உதவுகிறது. ஆனால் மறுபுறம், பான் கார்டு மோசடியில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். அதாவது போலிக் கடன்களை, ஒரு சிலர் பான் எண்ணை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.. மேலும் சிலர் உங்கள் பான் […]
pan card

You May Like