ஆபாச படம்.! 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! POCSO சட்டத்தில் ஆசிரியர் கைது.!

சேலம் அருகே மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் போக்சோ(Pocso) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரி பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜியா உல் ஹக்(44).

இவர் அந்தப் பள்ளியில் பயின்று வரும் 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச படங்களை காட்டி தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் குறித்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்

இதனையடுத்து தலைமையாசிரியர் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில். ஆசிரியர் ஜியா உல் ஹக் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாலியல் குற்றவாளி ஆசிரியர் ஓமந்தூர் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் ஆசிரியர் ஜியா உல் ஹக்கை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"கை சின்னத்தில் களமிறங்கும் கமல்ஹாசன்.?" Congress -ன் மாஸ்டர் பிளான்.!

Sun Feb 18 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் காங்கிரஸ்(congress) தலைமையிலான […]

You May Like