தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் படித்து வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்தார் இருவருக்குள்ளான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
மேலும் அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்த சமயத்தில் அதை அவருக்கு தெரியாமலேயே தன்னுடைய கைபேசியில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார் அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நண்பர்கள் இருவரும் மாணவியை எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அந்த மாணவியை அவர்கள் இருவரும் மிரட்டினர். ஆனால் இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களோடு உல்லாசமாக இருக்கவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி காதலனின் இரண்டு நண்பர்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். ஆனால் அதையும் வீடியோவாக பதிவு செய்து மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர் ஆகவே அவர்களும் இந்த வீடியோவை காட்டி மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இவர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் வேறு வழி தெரியாமல் புகார் வழங்கினார். இந்த புகாரை அடுத்து காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரையும் காவல்துறையினர் போக்சோ போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்