தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மூலம் இந்த நியமனங்களை மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான காரணம் என்னவென்றால், அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன. தேர்வுகளின் போது மாணவர்களுக்கு கற்பிக்க தற்காலிக ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போது, அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களின் தகுதி, திறமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பிக்கப் கூடியவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தற்காலிக நியமனங்கள் மூலம், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். பள்ளிகளில் பாடங்கள் தடையின்றி நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் இது உதவுகிறது. இந்த நிலையில் அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.