மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சார்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த இளைஞர் கடற்கரை அருகே இருக்கின்ற மஹிம் என்ற கிராமத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பு அந்த சிறுமியை அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இளைஞரின் நண்பர்கள் அந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். அதன் பிறகு அவர்களும் சேர்ந்து அந்த இளைஞருடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதன் பிறகு வீட்டுக்கு வந்த அந்த சிறுமி இது தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு மாவட்ட காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் வழங்கப்பட்டது இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் 8 பேரை
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.