ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்…! முதல்வர் அறிவிப்பு…!

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்று நடந்தது. இதில் அரவிந்த் ராஜ் என்னும் மாடுபிடி வீரர், யாரும் எதிர்பாராத விதமாக வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்தார். பின் அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


அதேபோல திருச்சபை சேர்ந்த அரவிந்த் என்பவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அரவிந்த் ராஜ் மற்றும் அரவிந்த் இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததோடு, தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மீண்டும் வந்தது கட்டுப்பாடு...! அடுத்த 30 நாட்கள் இது அனைத்தும் கட்டாயம்...! அரசு அதிரடி உத்தரவு...!

Tue Jan 17 , 2023
கொரோனா அதிகரிப்பை அனைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பித்தது. மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயத்தில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநில அரசு […]
1007548 school covid outbreak

You May Like