‘ஜப்பானின் பாபா வங்கா’ (Baba Vanga) என்று அழைக்கப்படும் ஜப்பானிய மங்கா (manga) எழுத்தாளர் ரியோ தட்சுகி, 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்று உலகைத் தாக்கும் என்று முன்னரே கணித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஜப்பான் டுடே’ (Japan Today) செய்தி நிறுவனத்தின்படி, 1999-ல் அவர் ‘எனக்குத் தெரியும் எதிர்காலம்’ (The future as I see it) என்ற தலைப்பில் ஒரு காமிக்ஸ் கதையை எழுதினார்..
அதில் 2020-ல் ஒரு வைரஸ் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது. “2020-வாக்கில் ஒரு அறியப்படாத வைரஸ் தோன்றி, ஏப்ரல் மாதத்தில் அதன் தீவிரத்தை உச்சகட்டத்தை எட்டும்” என்று அவர் அதில் எழுதியிருந்தார்.
அவர் கணித்த படியே சரியாக அந்த காலக்கட்டத்தில் தான் கோவிட்-19 பெருந்தொற்று உலகையே நிலைகுலையச் செய்தது.. குறிப்பாக 2021-ல் டெல்டா வகை வைரஸ் பரவலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வைரஸின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, 2022-வாக்கில் உலகம் ஊரடங்குகள் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டது.
அவரது கணிப்புகளின்படி, அந்த வைரஸ் மீண்டும் வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ல் கோவிட்-19 மீண்டும் பரவத் தொடங்கும். அதே காமிக்ஸ் கதையில், “அந்த வைரல் 2020-ல் மறைந்துவிடும், ஆனால் 2030-ல் மீண்டும் தோன்றும்” என்று அவர் எழுதியிருந்தார். அவரின் இந்த பகீர் கணிப்பு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது
ஜப்பானிய ‘பாபா வங்கா’வின் (Baba Vanga) இந்தக் கணிப்பு உண்மையாகுமா?
பாடகர் ஃப்ரெடி மெர்குரி மற்றும் இளவரசி டயானா ஆகியோரின் மரணங்களை தட்சுகி முன்கூட்டியே கணித்திருந்தார். கனவில் தனக்குத் தோன்றிய காட்சிகளை அவர் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம். உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ‘டிசீஸ் எக்ஸ்’ (Disease X) எனப்படும் புதிய பெருந்தொற்று குறித்து எச்சரித்து வருகின்றனர்; ஆனால் அது எதனால் ஏற்படும் என்பது குறித்து அவர்களுக்கு உறுதியான தகவல் இல்லை.
எதிர்கால பெருந்தொற்றுகளை எவ்வாறு கையாள்வது மற்றும் கோவிட்-19 காலத்தில் செய்யப்பட்ட தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. தற்போது, H5N1 பறவைக் காய்ச்சல், தட்டம்மை, எம்பாக்ஸ் (mpox) மற்றும் எபோலா ஆகியவை உலகின் பல பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, தட்சுகியின் கணிப்பு உண்மையானால், அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
இருப்பினும், அவரது கணிப்புகள் ஒரு “15 ஆண்டு சுழற்சியைப்” பின்பற்றுகின்றன; அவை எப்போதும் குறிப்பிட்ட நேரத்தில் உண்மையாகிவிடுவதில்லை. அதாவது, 2030-ல் எதுவும் நடக்கவில்லை என்றால், அந்த ஆபத்து மேலும் 15 ஆண்டுகள் தள்ளிப்போய் 2045-ல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது..



