மனைவியை ஆபாச படம்…. சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய கணவர்! 5 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் பேரில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.


காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் புலன் விசாரணையை தொடங்கி சாட்சியங்களின் அடிப்படையில் உகார்தாரரின் கணவரான கருவுறை சார்ந்த தேவ ஆனந்த் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இருதரப்பு சாட்சியங்கள் மற்றும் விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தேவ் ஆனந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

1newsnationuser5

Next Post

கள்ளக்காதலனிடமிருந்து அம்மாவை புத்திமதி கூறி பிரித்து வந்த +1 மாணவன்! கத்தியால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்!

Wed Apr 12 , 2023
கள்ளக்காதலனிடமிருந்து தாயை மீட்ட +1 மாணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொண்டு சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் தாங்கள் ஏரிக்கரை பகுதியைச் சார்ந்தவர் இளஞ்செழியன் வயது 38. இவரது மனைவி தனலட்சுமி. பிளம்பிங் வேலை செய்து வரும் இளஞ்செழியனுக்கு மதன்குமார் மற்றும் ஜீவா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகனான மதன்குமார் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இளஞ்செழியன் மது […]
IMG 20230412 WA0260

You May Like