earthquake: அதிகாலையில் குலுங்கிய பூமி!… அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்!… அச்சத்தில் மக்கள்!

earthquake: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் 2 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 1.49 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்குள் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதாவது அதிகாலை 3.40 மணியளவில் கிழக்கு காமெங் பகுதியில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கத்தின் பாதிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Readmore: பதவி கிடைக்குமா?… கிடைக்காதா?… பொன்முடி பதவி விவகார க்ளைமாக்ஸ்!… உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Kokila

Next Post

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!… விலை குறைப்போம் என பொய் வாக்குறுதி!… வெட்கமே இல்லாத திமுக!… Annamalai விமர்சனம்!

Thu Mar 21 , 2024
Annamalai: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க திமுகவுக்கு வெட்கமாக இல்லையா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அதே […]

You May Like