அதிரடி நடவடிக்கை..‌!கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை…!

இடைத் தேர்தல், வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதன்படி, 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

கொரோனாவுக்கு மத்தியில் உள்ளாட்சித் தேர்தல்..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அடுத்ததாக உட்பிரிவு (1)-ன் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, சிலவற்றை கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது, ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். மேலும் ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என சுட்டிக்காட்டி உள்ளது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A பிரிவின் (1) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)(b) உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், வரும் 16-ம் தேதி காலை 7 மணியிலிருந்து 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவு நடைபெறும்.

இதற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது” என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (b)ஆம் பிரிவின் கீழ், மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20230210 064636

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..!!

Fri Feb 10 , 2023
பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கும் நிலையில், விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உலகில் எங்கிருந்து மலிவு விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அங்குதான் வாங்குவோம் என்றும் விரைவில் மலிவு விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரு லிட்டர் […]
petrol diesel e1675992991345

You May Like