சென்னை| அடையாற்றில் குதித்து மருத்துவமனை ஊழியர் தற்கொலை….! காரணம் என்ன…..?

சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் இவருடைய மகன் ராமச்சந்திரன்(36) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அவருடைய குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

இத்தகைய நிலையில், காணாமல் போன ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு திரு வி கா பாலம் அருகே நிற்பதாக அவரது தந்தை லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில், நேற்று காலை தீயணைப்பு படை வீரர்கள் அடையாற்றில் ரப்பர் படகு மூலமாக தேடுதல் பணியை ஆரம்பித்தனர்.

இதற்கு நடுவே அடையாறு பாலத்தின் கீழ் இராமச்சந்திரன் சடலம் மிதந்து கொண்டிருந்தது. பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இது குறித்து அடுத்த கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

Next Post

சென்னை|35 லட்சம் ரூபாய் மோசடி செய்த கட்டுமான நிறுவன அதிபர் மனைவியுடன் அதிரடி கைது……!

Fri Jun 2 , 2023
சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லதா என்ற பெண்மணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில் காஞ்சிபுரம் வாஞ்சிவாஞ்சேரி வள்ளலார் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நளினி(48) என்பவர் என்னுடன் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அவர் தன்னுடைய கணவர் சங்கர் (54) கட்டுமான தொழில் செய்து வருவதாகவும் கீழ்கட்டளையில் கட்டுமான நிறுவனம் […]
6f4e0229138bf6f84b96c5eab5d3ae3c1d5ff5e74579457db471873ddf259e05

You May Like