திருத்தணி அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அதிரடி கைது….!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது.


இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ரகுவரனை தகாத வார்த்தைகளால் வசைப்பாடி, கிராம சபை கூட்டத் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போட விடாமல் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் ரகுவரன் முரளிதரன் மீது புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் திட்டுதல் போன்ற பிரிவுகளின் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

Next Post

’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட்..!!

Sat May 13 , 2023
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு படம். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை படமாக்க எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், பலரின் முயற்சிகள் தோற்றுப்போக கடைசியில் மணிரத்னம் அவர்களால் நிறைவேறியது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களும் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறது. படத்தின் 2ஆம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி […]
ponniyin selvan 1662514282

You May Like