“ஆளும் வர்க்கத்தின் அடிவருடி காவல்துறை.. இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி..!” ஆதவ் அர்ஜூனா பதிவால் சர்ச்சை..!!

a1775

ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று தவெக ஆதவ் அர்ஜுனா பதிவிட்டத்ஸ்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்! என்று தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலான சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை நீக்கியுள்ளார்.

Read more: அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு…!

English Summary

“The police are the servants of the ruling class.. The only way out is the youth revolution..!” Controversy over Adhav Arjuna’s post..!!

Next Post

தீபாவளி அதிரடி ஆஃபர்..!! இந்த கடையில் பாதி விலையில் பட்டுப்புடவைகள் வாங்கலாம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Tue Sep 30 , 2025
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]
Saree 2025

You May Like