ஆரம்ப சுகாதார மையங்களில் 14 வகையான பரிசோதனைக்கு கட்டணம் கிடையாது…! மத்திய அரசு சூப்பர் தகவல்…!

நாட்டில் மொத்தம் 1,78,184 ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்கள் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


நோய்த் தடுப்பு முறைகள், தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகள், குழந்தைகள் நலன் மற்றும் இதர சுகாதார சேவைகளும் இந்த மையங்களில் வழங்கப்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மருந்துகள், பரிசோதனைகள், கூடுதல் மனிதவளம், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு நிலைகளில், ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், கட்டணமில்லா சுகாதார பரிசோதனை முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டணமில்லா உடல் பரிசோதனை சேவைகளுக்கான முன்முயற்சியாக ஆரம்ப சுகாதார மையங்களில் 63 வகையான பரிசோதனைகள் மற்றும் துணை மையங்களில் 14 வகையான பரிசோதனைகள் உட்பட பல்வேறு பொது சுகாதார சேவைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த 8 நாடுகளில் ஒரு நதி கூட இல்லை, வறண்ட பகுதி, கடற்கரை மட்டுமே உள்ளன.. அப்ப தண்ணீருக்கு என்ன செய்வாங்க?

Sun Aug 3 , 2025
ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]
b44c976996a63204

You May Like