ஏர் இந்தியா விமானத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.
இன்று அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விமானத்தின் உள்ளே ஒரு டிஷ்யூ பேப்பரில் கையால் எழுதப்பட்ட குறிப்பை ஒரு விமான ஊழியர் கண்டுபிடித்தார். அதிகாலை 4:00 மணியளவில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த ஒரு விமான ஊழியர் ஒரு டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட மிரட்டல் குறிப்பைக் கண்டுபிடித்தார். அந்தக் குறிப்பில், “ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது” என்று எழுதப்பட்டிருந்து.
இது பெரும் பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், விசாரணையில், அந்த மிரட்டல் ஒரு புரளி என்று கண்டறியப்பட்டது. இந்த குறிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு விரிவான தேடல் தொடங்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அச்சுறுத்தலின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் முழுமையான விசாரணை மற்றும் கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பதை உறுதிப்படுத்தினர்.
ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ எங்கள் விமானங்களில் ஒன்றில் குறிப்பிடப்படாத பாதுகாப்பு எச்சரிக்கை கண்டறியப்பட்டது. நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன, மேலும் அடுத்த விமானத்திற்கு விமானம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : 16 பில்லியன் தரவுகள் லீக்கான விவகாரம்.. பயனர்களுக்கு முக்கிய ஆலோசனையை வெளியிட்ட இந்திய அரசு..