உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவாரு… திருமாவை மறைமுகமாக தாக்கிய அ.மலை…!

Annamalai 2025 1

திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. நமது வாக்கைப் பெற்று அதிகாரத்தில் இருப்போர், கோயில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே இடையூறு செய்தனர். அடுத்தடுத்த வீடுகளுக்கும் இடையூறு செய்வர்கள். நமது முன்னோர் பாதுகாத்துக் கொடுத்துள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும்.

மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது. எங்காவது ஓரிடத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடு நேர்மையாக இருக்கிறதா..? ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது அரசியலுக்கான மாநாடு அல்ல.

திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார். அப்போது அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். திருப்பதி கோயிலுக்கு 917 இடங்களில் ரூ.2.47 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன. கோயிலைச் சார்ந்து நகரங்கள் இருந்தால் ஆன்மிகம், வாழ்வியல், பொருளாதாரம் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Read more: மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

Vignesh

Next Post

பெரும் சோகம்!. துடி துடித்து 25 பேர் பலி!. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!. தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல்!.

Mon Jun 23 , 2025
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் மார் எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளந்து. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். அப்போது, திடீரென, தேவாலயத்திற்குள் உடலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில், குழந்தைகள் உட்பட 25 […]
Syria Church Bombing 11zon

You May Like