“இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. பேரழிவை ஏற்படுத்தும்” அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் கண்டனம்..!

putin trump

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களை ரஷ்யா ‘முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று கண்டித்துள்ளது.


ஈரான் மீது இராணுவ தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களை, “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியிலும் உலக அளவிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களையும், அதனை ஒட்டி ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டு, இந்த நேரத்தில் அமெரிக்கா மிரட்டல் விடுப்பது மேலும் நிலைமை மோசமாகும் செயல் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க மிரட்டல் “பேரழிவை ஏற்படுத்தும்” – ரஷ்யா

ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் “ ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது மத்திய கிழக்கு முழுவதும் மட்டுமின்றி, உலக அளவிலும் பேரழிவு தரும் விளைவுகளை உருவாக்கும். ஈரானின் வர்த்தக கூட்டாளிகளை அழுத்தம் கொடுக்க உயர்ந்த வரி விதிப்புகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது “பொருளாதார மிரட்டல்” என்றும், இது ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சி..” என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டங்களுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்?

மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக விதித்து வரும் பொருளாதார தடைகள், அதனால் ஏற்பட்டுள்ள சமூக – பொருளாதார பிரச்சனைகள் தான் ஈரானில் நிலவும் பெரும் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும்,
“வெளிநாட்டு நாடுகள் திட்டமிட்டு பயிற்சி அளித்த குழுக்கள், போராட்டங்களை வன்முறையாக மாற்ற முயற்சி செய்கின்றன” எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மனித உரிமை அமைப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு (Human Rights Activists News Agency) அமைப்பு ஈரானில் இதுவரை குறைந்தது 2,571 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.. இவர்களில் 2,403 போராட்டக்காரர்கள், 147 அரசு ஆதரவாளர்கள், 12 குழந்தைகள், 9 பொதுமக்கள் அடங்குவர். 18,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ஈரானில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதால், இந்த எண்ணிக்கைகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. அரசாங்கமும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை. இந்த நிலைமை, 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய கலவரமாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன..

ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா – அமெரிக்காவுக்கு எதிர்ப்பு

ரஷ்யா தற்போது ஈரானுடன் நெருங்கிய உறவை வளர்த்து வருகிறது. அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்த்து, ஈரானை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக இந்த அறிவிப்பு காட்டுகிறது. இதனால், ரஷ்யா – அமெரிக்கா இடையே தூதரக மோதல் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Read More : ஈரானில் 26 வயது இளைஞருக்கு தூக்கு உறுதி; காமெனிக்கு எதிரான போராட்டங்களில் முதல் மரண தண்டனை..! அதிர்ச்சி தகவல்..!

RUPA

Next Post

இன்ஸ்டா கள்ளக்காதலனுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்த பெண்..!! நிர்வாணமாக கிடந்த உடல்..!! ஏற்காட்டில் பரபரப்பு..!!

Wed Jan 14 , 2026
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் […]
Crime 2026 3

You May Like